காலி - ஹீனடிகல, பொல்துவ பகுதியில் இன்றைய தினம் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
குறித்த நபர், வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்.
உனவட்டுன - தலவெல்ல பிரதேசத்தைச் சேர்ந்த 46 வயதான நபர் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். அத்துடன், குறித்த நபர் வட்டிக்கு பணம் கொடுப்பவர் என தகவல் கிடைத்துள்ளதாக தெரியவருகின்றது.
இந்தச் சம்பவம் தொடர்பில் பொலிசார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.